வீட்டுவசதி வாரிய வீடு வாங்கியவர்களுக்கு விரைவில் கிரையப்பத்திரம்
சென்னை:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகள் வாங்கியவர்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் கிரையப் பத்திரங்கள் கிடைக்க சிறப்பு முகாம்கள்நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அதன் ஒதுக்கீடுதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கதிட்டமிட்டுள்ளது.
அதன்படி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரையப்பத்திரம் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதற்காக ஏற்கனவே நடைமுறையிலிருந்த காலக்கெடு மற்றும் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இறுதி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள திட்டப் பகுதிகளில் முழுத்தொகையை செலுத்தி வாரிய நடைமுறை விதிகளைப் பூர்த்தி செய்திருந்தால், உடனடியாககிரையப்பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினால் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்கள் மூலம் வாரிய ஒதுக்கீடுதாரர்கள்எளிதாக கிரையப் பத்திரம் பெற்று பயன்அடைந்து வருகின்றனர்.
எனவே, இச்சிறப்பு முகாமை தொடர்ந்து நடத்த முடிவெடுக்கப்பட்டு வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில்வீடுகள், மனைகள் வாங்கியுள்ள ஒதுக்கீடுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 21.8.2000 முதல் 30.8.2000 வரை பெறப்பட்டு வாரிய நிபந்தனைகள்அனைத்தையும் பூர்த்தி செய்த ஒதுக்கீடுதாரர்களுக்கு கீழ்கண்ட நாட்களில் கிரையப்பத்திரம் வழங்கப்படும்.
11.9.2000 அன்று வேலூர் மற்றும் சேலம் வீட்டு வசதி பிரிவுகள், 12.9.2000 அன்று ஈரோடு மற்றும் ஓசூர் வீட்டு வசதி பிரிவுகள்,13.9.2000 அன்று கோவை வீட்டு வசதி பிரிவு, சிறப்புக் கோட்டம் -2 கோவை, சிறப்புக்கோட்டம் 6, கோவை மற்றும் திருவண்ணாமலைமாவட்டம்.
கிரையப்பத்திரம் பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கோட்டம் மற்றும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களிலும்சமர்ப்பிக்கலாம்.
இதுதொடர்பாக மேலும் தகவல் வேண்டுவோர், சம்பந்தப்பட்ட கோட்ட அரசு அலுவலகங்களிலுள்ள அறிவிப்புப் பலகை மூலமோ அல்லதுசம்பந்தப்பட்ட மேலாளரை (ஒதுக்கீடு சேவை மற்றும் விற்பனை) நேரில் சந்தித்தோ அறிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications