6-வது திருமணத்திற்குத் தயாரான 82 வயது மாப்பிள்ளை" சாவு
இஸ்லாமாபாத்:ஆறாவது முறையாகத் திருமணம் செய்து கொள்ளத் தயரான 82 வயது முதியவர் திருமணத்திற்கு முன்பு மாரடைப்பால் இறந்தார்.
அவர் பெயர் அலாஹ் டைனோ. தனக்கு ஆண்குழந்தை இல்லாத காரணத்தால் ஐந்து முறை திருமணம் செய்து கொண்டார். இவரது ஐந்து மனைவிகளும்இவருக்கு ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுக்காமலேயே இறந்து விட்டனர்.
இதற்கிடையே இவரது உறவினர்கள் இவருக்கு ஆறாவதாகத் திருமணம் செய்து வைக்க முயன்றனர். ஆனால் டைனோ திருமணத்தில் விருப்பம்இல்லாமலேயே இருந்தார். ஆனால், இவரது உறவினர்கள் வற்புறுத்தி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். சிந்து மகாணத்தில் உள்ள சங்கார் பகுதியைச்சேர்ந்த ஒரு பெண்ணை நிச்சயம் செய்தனர்.
கடவுள் கிருபையால் ஆறாவது திருமணத்தின் மூலம் டைனோவுக்கு ஆண்குழந்தை பிறக்கும் என்று கூறி அவரை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.இதையடுத்து டைனோ திருமணத்திற்குச் சம்மதித்தார்.
திருமண நாளன்று, திருமணக் கோஷ்டியினர் மணப்பெண்ணின் ஊரான சங்கார் சென்றனர். அங்கு புதுமாப்பிள்ளை அலாஹ் டைனோ மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications