பார்வதி ஷா கொலை வழக்கில் ஆகஸ்ட் 28-ல் தீர்ப்பு
பரமக்குடி:
போலீஸ் நிலையம்பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பார்வதி ஷா கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆகஸ்ட்28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த வைர வியாபாரி ரவி ஷாவின் மனைவி பார்வதி ஷா. இவர்,கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி நள்ளிரவு கற்பழித்துக கொலைசெய்யப்பட்டார்.
இது தொடர்பாக ரவிஷாவின் சகோதரர் கமல்ஷா, கொலைக்கு உடந்தையாகஇருந்ததாக ரவிஷாவின் தாய் பத்மா ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இக் கொலைக்கும் ரவிஷாவுக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில்தெரியவந்தது. தலைமறைவாகிவிட்ட அவரைப் பிடிக்க பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இக் கொலை வழக்கு புதுவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.விசாரணை முடிவுற்ற நிலையில் இரு தரப்பு வழக்கறிஞர்களிடமும் சில விளக்கங்களைதலைமை நீதிபதி ஈ.வி. குமார் கேட்டறிந்தார்.
அதன்பிறகு இவ் வழக்கில் ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை 3.30-க்கு தீர்ப்பளிப்பதாகஅவர் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.












Click it and Unblock the Notifications