ஜெயலலிதாவால் ராஜ்குமார் உயிருக்கு ஆபத்து - வீரப்பன் மனைவி
சென்னை:
அதிரடிப் படையை அனுப்பி வீரப்பனை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதால், வீரப்பனிடம் பிணைக் கைதியாக உள்ள நடிகர்ராஜ்குமாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேட்டூரில் அவர் அளித்த பேட்டி:
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட போலீஸார், கிராம மக்களிடம் அத்துமீறி நடந்து கொண்டனர்.
இதுகுறித்து எனது கணவர் தொலைக்காட்சிக்கும், பத்திரிக்கைகளுக்கும் பேட்டி அளித்தபோது, ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்தார்
அதனால்தான் ஜெயலலிதா இப்போது வீரப்பனை சுட்டுத் தள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நான் கண்டிக்கிறேன்.
இப்படி சொன்னால் எனது கணவர் கோபமடைந்து ராஜ்குமார் உயிருக்கு ஊறு விளைவிப்பார் என்ற நோக்கத்தோடுதான் ஜெயலலிதா இவ்வாறுகூறியுள்ளார்.
தமிழக முதல்வரும், கர்நாடக முதல்வரும் கடத்தப்பட்டவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஜெயலலிதாவின் அறிக்கைமுட்டுக்கட்டையாக இருக்கும்.
நான் எனது கணவரை கேட்டுக் கொள்வது எல்லாம், தீய எண்ணங்களை விடுத்து நல்ல எண்ணங்களை ஏற்று மனம் திருந்தி வாழ வேண்டும்.கடத்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்.
நான் என் கணவரைப் போலவே தினம் ஓய்வு கிடைக்கும் போது பகவத் கீதை படித்து வருகிறேன் என்றார் முத்துலட்சுமி.