நீர் முழ்கிக் கப்பலை மீட்க இங்கிலாந்து மீட்புக் கப்பல் விரைகிறது
முர்மான்ஸ்க் (ரஷியா):
ரஷியாவின் பாரன்ட்ஸ் கடலில் மூழ்கியுள்ள அணு நீர் மூழ்கிக் கப்பலை மீட்கும்பணியில் இங்கிலாந்து மீட்புக் குழுவினர் சனிக்கிழமை ஈடுபடவுள்ளனர்.
அணு சக்தியால் இயங்கும் ரஷியாவின் குர்ஸ்க் நீர் மூழ்கிக் கப்பல் கடந்த சனிக்கிழமைபாரன்ட்ஸ் கடலில் மூழ்கியது. ஏதோ ஒரு பொருளுடன் மோதியதால் கப்பலில்உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கப்பல் மூழ்கத் துவங்கியது. கப்பில் 118 பேர்உள்ளனர்.
இவர்களை மீட்க ரஷிய கடற்படை வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றன.இதையடுத்து இங்கிலாந்து உதவி கோரப்பட்டது. இங்கிலாந்து மீட்புக் குழுவினர்நார்வே வந்து அங்கிருந்து நார்வே நாட்டுக் கப்பல் மூலம் பாரன்ஸ் கடலுக்கு வந்துகொண்டுள்ளனர். அவர்களுடன் சிறிய அளவிலான நீர் மூழ்கிக் கப்பலும் மீட்புக்காகவருகிறது.
கடலில் மூழ்கியுள்ள நீர் மூழ்கிக் கப்பல் இருக்கும் இடத்தை இங்கிலாந்து மீட்புக் கப்பல்இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்க வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நார்வே நாட்டு நீச்சல் வீரர்கள் குழு ஒன்றும் பாரன்ட்ஸ் கடலுக்கு விரைகிறது.
கடலில் நிலைமை சரியாக இருந்தால் எங்களது பணியதைத் தடங்கலின்றித் தொடங்கமுடியும் என்று இங்கிலாந்து மீட்புக் குழுவின் கமாண்டர் ஆலன் ஹோஸ்கின்ஸ்கூறியுள்ளார்.
இதற்கிடையே, ரஷிய அதிகாரிகள் மீட்புப் பணியில் மிகவும் அலட்சியமாகஇருப்பதாக 118 பேருடைய உறவினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications