ஈவ்-டீசிங்கில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஈவ்-டீசிங்கில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று மத்தியஉள்துறை இணை அமைச்சர் ஐ.டி. சவாமி தெரிவித்தார்.

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்டகேள்விகளுக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதில்:

2000--ம் ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 1617 ஈவ் டீசிங் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே மற்ற மாநிலங்களில் பதிவான வழக்குகளை விடஇது அதிகம்.

கடந்த ஆண்டு 2825 வழக்குகளுடன் ஆந்திரம் முதலிடம் பெற்றது. அதற்கு முந்தையஆண்டில் 2571 வழக்குகளுடன் உத்திரப் பிரதேசம் முலிடம் பெற்றது.

ஈவ் டீசிங்கைப் போல விபசார வழக்குகளிலும் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.2000-ம் ஆண்டில் இதுவரை 2160 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில்மொத்தம் 5879 வழக்குகள் பதிவாகின.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடப்பு ஆண்டில் இதுவரை மொத்தம் 5760வவக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் 12,151 வழக்குகளும், அதற்குமுந்தைய ஆண்டில் 11,201 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

நாட்டிலேயே கற்பழிப்புகள் அதிகம் நடைபெறும் மாநிலம் மத்தியப் பிரதேசம்தான்.அங்கு ஆண்டுக்கு சராசரியாக 3000 கற்பழிப்புகள் நிகழ்கின்றன. தமிழகத்தில்சராசரியாக 350 கற்பழிப்புகள் நடைபெறுகின்றன.

பெண்களுக்கு எதிராக மிக அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் முதலிடத்தில்மகாராஷ்டிரமும், அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசமும் உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+