பெண் போலீஸின் தலைமுடியை இழுத்து உதைத்த பெண் கைது
பரமக்குடி:
போலீஸ் நிலையம் முன்பு பெண் போலீஸின் தலைமுடியைப் பிடித்து இழுத்து உதைத்தபெண் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடியில் நடந்த இச் சம்பவம் பற்றிய விவரம் வருமாற:
பரமக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி மல்லிகா.பாண்டியின் தம்பி மனைவி கோவிந்தம்மாள்.
சமீப காலமாக மல்லிகாவுக்கும், கோவிந்தம்மாளுக்கும் இடையே தகராறு இருந்துவந்தது. இது குறித்து கோவிந்தமாளிடம் பரமக்குடி போலீஸ் நிலையத்தில் விசாரணைநடத்தப்பட்டது.
போலீஸ் நிலையத்துக்கு வெளியே கோவிந்தமாளின் கணவர் அரிகிருஷ்ணன், பாண்டி,மல்லிகா ஆகியோர் நின்றிருந்தனர்.
அப்போது போலீஸ் நிலையத்துக்கு வெளியே வந்த பெண் போலீஸ் சத்தியாவுக்கும்,மல்லிகாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடந்த மல்லிகா, சத்தியாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அவரைஅடித்து உதைத்தார். சத்தியாவும் மல்லிகாவை பதிலுக்குத் தாக்கினார்.
இதைப் பார்த்து போலீஸ் நிலையத்தில் இருந்த மற்ற பெண் போலீஸார் ஓடிவந்துஇருவரையும் தடுத்து நிறுத்தினர்.
இச் சம்பவம் தொடர்பாக மல்லிகா கைது செய்யப்பட்டார்.