கர்நாடகத்தில் கொத்தடிமைகளாக இருந்த 17 தமிழக சிறுவர்கள்
தாவணகெரே:
கர்நாடகத்தில் கொத்தடிமைகளாக கொடுமைப்படுத்தப்பட்டு வந்ந தமிழகச் சிறுவர்கள்17 பேர் போலீஸாரால் மீட்கப்பட்டனர்.
தாவணகெரே பகுதியில் சிறுவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்பதாகதாவணகெரே ஆட்சித் தலைவர் சிவராமுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பழைய தாவணகெரே பகுதியிலுள்ள சிவாஜி நகர், பாஷா நகர், அகமதுநகர் பகுதிகளில் உள்ள மிட்டாய் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அதிரடி சோதனைநடத்தப்பட்டது.
அப்போது அத் தொழிற்சாலைகளில் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 சிறுவர்கள்கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
17 சிறுவர்களும் 10 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களதுபெற்றோருக்கு மிட்டாய் தயாரிப்புத் தொழிற்சாலை அதிபர்கள் சிறிதளவே பணம்கொடுத்து அழைத்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சிறுவர், மிட்டாய்த் தொழிற்சாலைகிடங்குகளிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். உணவும் அங்கேயேகொடுக்கப்பட்டு வந்தது. வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. பெற்றோரைப்பார்க்க வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணிவரை இச் சிறுவர்கள் கொத்தடிமைகளாகவேலை வாங்கப்பட்டு வந்தனர். தற்போது மீட்கப்பட்டுள்ள இவர்கள் பாதுகாப்பானஇடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் வீட்டுக்கு விரைவில் அனுப்பி வைப்பதற்கானமுயற்சிகளைப் போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக மிட்டாய் தயாரிப்புத் தொழிற்சாலை உரிமையாளர்கள் மணி,கணபதி, சுவாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குழந்தைத்தொழிலாளர்கள் சட்டம், கொத்தடிமைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தாவணகெரே பகுதியில் மேலும் பல சிறுவர்கள் கொத்தடிமைகளாக இருப்பதாகக்கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவர்களைக் கொத்தடிமைகளாக வைத்திருந்த மிட்டார் தயாரிப்புத்தொழிற்சாலைகளின் உரிமங்களை ரத்து செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர்உத்தரவிட்டுள்ளார்.