For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்குமாரை மீட்க கர்நாடக அரசின் முயற்சிக்கு கவுடா ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமாரைமீட்கும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு தனது ஆதரவை முன்னாள் பிரதமரும்,மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவ கவுடா தெரிவித்துள்ளார்.

மதுரையில் நிருபர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:

கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச்சென்றுள்ளான். வீரப்பனிடம் பணயக் கைதிகளாக உள்ள ராஜ்குமாரையும்மற்றவர்களையும் மீட்க கர்நாடக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இம் முயற்சிகள் அனைத்துக்கும் எனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது எல்லோருக்கும் ஒரே எண்ணம், ராஜ்குமார் பத்திரமாக வீடுதிரும்பவேண்டும் என்பதுதான்.

அந்த வகையில் கர்நாடக அரசின் முயற்சியும், தமிழக அரசின் முயற்சியும் வெற்றிபெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து தமிழகத்தில் நடத்தியஆர்ப்பாட்டத்தைப் போல் அடுத்து கேரளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இந்தியா முழுவதும் நடத்தப்படும். வேளாண்மைத்துறையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கொள்கைகள் விவசாயிகளுக்கு எந்தவகையிலும் பயனளிப்பதாக இல்லை.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு தவறாகக் கையாண்டுவிட்டது. நாட்டின்மூன்றாவது அணி ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அந்த முயற்சியில் ஜனதாதளம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றார் தேவ கவுடா.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X