For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான் என்கிறார் மூப்பனார்

By Staff
Google Oneindia Tamil News

மேதுரை:

தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான் ஏற்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனார் தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நான் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்சுவாமி கூறஇயுள்ளார். அவர் எனது நண்பர். அவருடைய விருப்பம் எனக்குமகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் 3-வது அணி உருவாகும் வாய்ப்பு இருக்கிறதா என்பதை இப்போதுசொல்லமுடியாது. தேர்தல் வரும்போதுதான் இது பற்றி முடிவு செய்யமுடியும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நான் சந்தித்ததில் குறிப்பிட்டஎந்த காரணமும் இல்லை. மரியாதை நிமித்தமாக அவரை நான் சந்தித்தேன்.

தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான் ஏற்படும். அதிமுகவினர் தனித்து ஆட்சிஅமைப்போம் என்று கூறியிருப்பது அவர்களது கணிப்பு. எனது கணிப்பு தவறாகக்கூட இருக்கலாம். எது சரி, தவறு என்பது தேர்தலுக்குப் பிறகு தெரிந்துவிடும்.

சாதி அமைப்புகள் உருவாவதற்கு பொது மக்களிடம் இருக்கும் வரவேற்பும்,பத்திரிக்கைகள்தரும் முக்கியத்துவமும்தான் காரணம். இது ஒருபோதும் நன்மைபயக்காது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் கடத்தப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமார்விருவிக்கப்படவேண்டியதுதான் முக்கியம். தமிழக, கர்நாடக மாநிலங்களில் அமைதிநிலவவேண்டும்.

இப் பிரச்சினையில் மேற்கொண்டு பேசி நிலைமையை சிக்கலாக்க விரும்பவில்லை.

தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில் ஒரேநேரத்தில் தேர்தல் நடைபெறஉள்ளது. ஆகவே, தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

அதிமுக-தமாகா உறவைப் பற்றி சொல்வதென்றால் இருவரும் நண்பர்களாகஇருக்கிறோம். கருணாநிதியும் என் நண்பர்தான். பெரியாரும் ராஜாஜியும்நண்பர்களாக இருக்கவில்லை. அதைப் போல்தான் இதுவும். சுப்பிரமணியன்சுவாமியும் என் நண்பர்தான்.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறோம்.எப்போது, எப்படி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

பாரதீய ஜனதா கூட்டணிக் கட்சிகளிடையே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.ஆகையால், மத்தியில் அந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிப்பது கஷ்டம்தான்.இருந்தாலும், அடிக்கடி தேர்தல் நடப்பது நாட்டுக்கு நல்லது அல்ல.

தமாகா சார்பில் காமராஜர், ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாக்கள் வருகிற 29-ம் தேதிசிதம்பரத்தில் நடைபெற உள்ளது. அப்போது கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டமும்நடைபெறும் என்றார் மூப்பனார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X