For Quick Alerts
For Daily Alerts
Just In
மகாத்மா காந்தியின் மருமகள் காலமானார்
பெங்களூர்:
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் மருமகள் நிர்மலா காந்தி (92), குஜராத் மாநிலம்சேவா கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை காலமானார்.
அவருக்கு மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சுமித்திரா குல்கர்னி உள்பட 2மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குஜராத்தில் உள்ள கிராம பரிஷிஸ்தான்அமைப்பின் டிரஸ்டியாக அவர் இருந்தார்.
மாமனார் மகாத்மா காந்தி தலைமையில் நடந்த சுதந்திரப் போராட்டங்களில் கணவர்ராம்தாஸ் காந்தியுடன் கலந்து கொண்டவர் நிர்மலா காந்தி. அது தவிர பலசத்தியாகிரகங்களிலும் அவர் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, August 22, 2000, 5:30 [IST]