For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு வேண்டும்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என திருப்பூர்ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் அவர் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன்பு டில்லியில் ஆயத்த ஆடை ஏற்றுமதி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில்,ஏற்றுமதியைப் பெருக்க உள்ள வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்றுமதியாளர்களுக்கு உள்ளபிரச்னைகள் எடுத்துக் கூறப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வர்த்தக அமைச்சர்ஏற்றுமதியாளர்களுக்கு உள்ள இடர்பாடுகளை களைய உறுதி மொழியளித்துள்ளார்.

ஆயத்த ஆடை ஏற்றுமதியைப் பொறுத்தவரை ஏற்றுமதியாளர்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டங்கள்முழுமையாகப் பயன்படுவதில்லை. வங்கிகள் போதுமான அளவிற்கு கடன் கொடுத்தாலும் கடுமையானவிதிமுறைகள் காரணமாக கடன் பெற்று பயனடைவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

வட்டி விகிதம் அதிக அளவில் உள்ளது. மேலும், பணையப் பத்திரத்தின் மதிப்பும் அதிகமாக இருக்க வேண்டும்என வங்கிகள் கோருகின்றன. வங்கிக் கடன்கள் நீண்ட காலக் கடன்களாக குறைந்த வட்டி விகிதத்தில் இருக்கவேண்டும்.

ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். ஏற்றுமதியாளர்களின்வருமான வரி வங்கிகளிலேயே பிடித்தம் செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் சக்திவேல்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X