சென்னையில் தி.மு.க. முப்பெரும் விழா
சென்னை:
சென்னையில் தி.மு.கழக முப்பெரும் விழா அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கவிருக்கிறது. இதையொட்டி பெரியார், அண்ணா, கலைஞர் விருது பெறுவோர்விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 15 ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க.சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா,தி.மு.க. பிறந்தநாள் விழா (தி.மு.க.தொடங்கிய நாள்) ஆகிய முப்பொரும் விழா செப்டம்பர் 15 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை 3 நாட்கள்கொண்டாடப்பட உள்ளது.
அதன் விவரம் வருமாறு:
செப்டம்பர் 15 ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா, விருது வழங்கும் விழா மற்றும், தி.மு.க.அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை சார்பில்மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறுகிறது.
16 ம் தேதி தி.மு.க.அணிகள் சார்பில் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 17 ம் தேதி பெரியார் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள் விழாவும்,தி.மு.கழகம் பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட உள்ளன.
முப்பெரும் விழாவையொட்டி இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் விருது திருவாரூர் கு.தென்னவனுக்கும், அண்ணா விருது பரமக்குடி சுப.தங்கவேலுவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது ஸ்ரீவில்லிபுத்தூர்ச.அமுதனுக்கும், கலைஞர் விருது பெங்களூர் திராவிட மணிக்கும் வழங்க உள்ளது. இந்தத் தகவலை தி.மு.க.தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.