ரங்கராஜன் குமாரமங்கலம் மரணம்
டெல்லி:
மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 48.
மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் ரத்தப் புற்றுநோய் காரணமாக டெல்லி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 12 ம் தேதி டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திங்கள்கிழமை அமைச்சருக்கு ரத்த ஓட்டத்தில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டதாகடாக்டர்கள் தெரிவித்தனர்.
அதற்குப் பின் செவ்வாய்க்கிழமை மாலை அவருக்கு சீரான ரத்த ஓட்டம் இல்லை. நினைவு திரும்பாத நிலையில் உயிர்காக்கும் கருவிகளின் துணையோடுஅமைச்சர் ரங்கராஜன் உயிருக்குப் போராடி வந்தார்.
டாக்டர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இதற்கிடையே நினைவு திரும்பாமலேயே அமைச்சர் ரங்கராஜன் புதன்கிழமை அதிகாலை4.30 மணிக்கு மரணமடைந்தார்.












Click it and Unblock the Notifications