ரங்கராஜன் மறைவு நாட்டுக்கு இழப்பு ... வைகோ
சென்னை:
மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மறைவுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
மரணத்தின் கொடிய கரங்கள் நம்மைக் கண்ணீரில் தவிக்கவிட்டு ரங்கராஜனைப் பிரித்துக் கொண்டு போய் விட்டதுஎன்ற அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை.
மருத்துவமனையில் நினைவிழந்து மரணத்தோடு பேராடுகிறார் எனற செய்தி இடியெனத் தாக்கிய நேரத்தில்,காலனின் பிடியிலிருந்து தப்பி அவர் நலம் பெற வேண்டுமென்று பிரதமர் முதல் அனைவரும் ஏங்கித் தவித்தோம்.
எத்தகைய துன்பம் நேர்ந்தாலும், துயர் சூழ்ந்தாலும், மனம் கலங்காது மாறாத புன்னகையுடன், சிரிக்கச் சிரிக்கப்பேசி அனைவரையும் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் அந்த உன்னதமான உயிர் ஓய்ந்து விட்டதே.
ஆற்றலும், அறிவுத் திறனும், மதிநுட்பமும், எதையும் திட்டமிட்டுச் செயலாற்றி வெற்றியை ஈட்டும் சாதுர்யமும்,மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ரங்கராஜன் குமாரமங்கலம், தொழிற்சங்கத் தலைவராக,நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக வியத்தகு சாதனைகளைக் குவித்தவர்.
பொதுவாழ்க்கையில் இன்னும் பல சிகரங்களின் உச்சத்தில் அவர் ஜொலிப்பார் என்றல்லவா நான்எதிர்பார்த்திருந்தேன். எத்தனையோ ஆண்டுக் காலம் வாழ்ந்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் அளப்பரியசேவை செய்யக் காத்திருந்த ஒளிச்சுடர் இப்படி அணைந்து விட்டதே.
இந்தியாவின் எல்லை காக்க கார்கிலில் நடந்த யுத்தத்தில் தன் இன்னுயிர் ஈந்த மேஜர் சரவணனின் பூத உடலைப்புகழ் மலர்களுடன் எடுத்துக் கொண்டு வந்து காவிரிக் கரை மயானத்தில் நெருப்பிலிட்டபோது கண்ணீர் பொங்கவீரவணக்கம் செலுத்திய ரங்கராஜனின் மேனியையும் இன்று சிதையில் அடுக்கும் நிலை ஏற்படுமென்று நான்கனவிலும் எண்ணவில்லை.
இந்த துன்பத்திலிருந்து நாம் எப்படி மீள முடியம்? அவரது மறைவு பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்குமட்டுமல்ல, இந்திய நாட்டுக்கே பேரிழப்பாகும்.
அவரை இழந்து கண்ணீரில் பரிதவிக்கும் அவரது துணைவியாருக்கும், பிள்ளைச் செல்வங்களுக்கும் உற்றார்உறவினர்களுக்கும், பா.ஜ.க.வினருக்கும் ம.தி.மு.க சார்பில் என் கண்ணீர் அஞ்சலியை, ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.