மும்பையில் பூம்புகார் கிளை
ஈரோடு:
மும்பையில் தமிழக அரசின் கைவினைப் பொருள் விற்பனையகமான பூம்புகார், கிளை ஒன்றைத் திறந்துள்ளது.இந்த விற்பனையகம் ஆகஸ்ட் 22ம் தேதிமுதல் செயல்படத் தொடங்கியது.
தமிழக அரசு, கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய பூம்புகார் விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது.தமிழகத்தில் 16 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் விழாக் காலங்களுக்குத் தகுந்தவாறு சிலைகள்விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது விநாயகர் சதுர்த்தி காலமாதலால், விநாயகர் சிலைகள் பார்வைக்குவைக்கப்பட்டுள்ளன.
மும்பையில் விநாயகர் சதுர்த்தி மிகவும் பிரபலமாகக் கொண்டாடப்படுவதையடுத்து மும்பையில் ஒரு பூம்புகார்கிளை திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பூம்புகார் மையங்களுக்கு சிலைகளை உருவாக்க காஞ்சிபுரம், மாமல்லபுரம் போன்ற இடங்களில்சிற்பக் கூடங்கள் உள்ளன. கும்பகோணத்தில் வெள்ளெருக்கினால் விநாயகர் சிலை உருவாக்கும் மையம் ஒன்றும்செயல்பட்டு வருகிறது.
தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் தட்டு செய்யும் தொழிற்சாலை ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு பலகலைப் பொருட்களும் சிலைகளும் உருவாக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில், பாண்டிச்சேரி, பெங்களூர்,கல்கத்தா போன்ற இடங்களில் பூம்புகார் விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலுக்கு ரூ 47 லட்சம் செலவில் தங்கத் தேர் உருவாக்குவதில் பூம்புகார்நிலையம் ஈடுபட்டுள்ளது. கோவையில் உள்ள மருமதமலை முருகன் கோயிலுக்கும் இந்த நிலையம், தங்கத் தேரைஉருவாக்கிக் கொடுத்துள்ளது.