முழுஅடைப்பு நடத்த ராஜ்குமார் ரசிகர்கள் முடிவு
மைசூர்:
48 மணி நேரத்திற்குள் நடிகர் ராஜ்குமாரை விடுவிக்காவிட்டால் வரும் 28 ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்துவோம் என்று மைசூர் மாவட்டராஜ்குமார் ரசிகர் சங்கம் அறிவித்துள்ளது.
அகில கர்நாடக ராஜ்குமார் ரசிகர் சங்கத்தின் மைசூர் மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில் ராஜ்குமார் ரசிகர் மன்றக் கூட்டம் புதன்கிழமைநடந்தது. கூட்டம் முடிந்தபின் நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நடிகர் ராஜ்குமாரை அடுத்த 48 மணி நேரத்தில் வீரப்பன் விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ரசிகர் மன்றம் சார்பில் மைசூர் மாவட்ட அளவில்போராட்டம் நடத்த முடிவு ச்ெயது இருக்கிறோம். இந்தப் போராட்டம் வரும் 28 ம் தேதி நடக்கும். அதற்குள் வீரப்பன், ராஜ்குமாரை விடுதலைசெய்வார் என்று நம்புகிறோம் என்றார்.
மண்டியாவில் முழு அடைப்பு:
இதற்கிடையே மண்டியா நகரில் புதன்கிழமை ராஜ்குமார் ரசிகர்கள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி புதன்கிழமைமண்டியாவில் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது.
இதையொட்டி மண்டியா நகரில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நகரில் குறைந்த அளவேவாகனங்கள் ஓடின. முழு அடைப்பு மிக அமைதியாக நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.