அக்டோபரில் புதிய ஆட்டோமொபைல் பாலிசி அறிமுகம்
டெல்லி:
புதிய ஆட்டோமொபைல் பாலிசி அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பெரிய தொழிற்சாலைகள் மற்றும் பொதுத் துறைநிறுவனங்கள் அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தார்.
டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தற்போது நடைமுறையில் உள்ள ஆட்டோமொபைல் பாலிசி சரியில்லை என்றும் அதில் மாற்றம் செய்யவேண்டும் என்றும் உலகின் பெரிய கார் உற்பத்திநாடுகளான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் கோரின.
இக் கோரிக்கையை ஏற்று ஆட்டோமொபைல் பாலிசியில் சில மாற்றங்களை உலக வர்த்தகக் கழகம் அறிவித்தது. இந்த மாற்றங்கள் அடுத்த ஆண்டுஏப்ரல் மாதம்தான் நடைமுறைக்கு வருகின்றன.
அதற்கு முன்னதாகவே இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உலக வர்த்தகக் கழகம் தெரிவித்துள்ள மாற்றங்களுடன் புதிய ஆட்டோமொபைல்பாலிசியை அறிமுகப்படுத்த்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
கார் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் முதலீடு செய்துள்ளவர்கள் நலன் எந்த வகையிலும் பாதிக்கபடாது. அத்தகையநடவடிக்கைகளில்தான் மத்திய அரசு ஈடுபடும்.
புதிய ஆட்டோமொபைல் பாலிசியை அறிமுகப்படுத்தும் முன் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் கார் உற்பத்தியாளர்களுடன்மத்திய அரசு பேச்சு நடத்தும் என்றார் ஜோஷி.
தற்போது நடைமுறையில் உள்ள ஆட்டோமொபைல் பாலிசியால் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மற்றும் கார் உற்பத்தியாளர்கள் மற்றும்முதலீட்டாளர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இந்தியாவில் கார் உற்பத்தியில் ஈடுபடும் வெளிநாட்டு நேரடி முதலீடுதாரர் குறைந்தது ரூ. 1100 கோடியை முதலீடு செய்யவேண்டும்.
மேலும், ஒரு காரைத் தயாரிக்கும்போது அதில் 50 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கவேண்டும். 3 ஆண்டுகளுக்கு இதைக்கடைப்பிடிக்கவேண்டும். அதற்குப் பிறகு அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த அளவை 70 சதவீதமாக அதிகரிக்கவேண்டும்.
மேற்கண்ட கட்டுப்பாடுகளால் கார் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்டோமொபைல்பாலிசியால் இத் தடைகள் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.