உலக விவகாரங்களில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் .. ரஷியா
மாஸ்கோ:
உலகப்பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இதுஎதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என இந்தியாவுக்கான சிறப்பு ரஷ்ய தூதர்அலெக்சாண்டர் கடாக்கின் ரேடியோ பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
வாய்ஸ் ஆஃப் ரஷ்யா ரேடியோவுக்கு அலெக்சாண்டர் கடாக் அளித்த பேட்டி:
இந்தியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் உலக அரங்கில் பரவி வரும் தீவிரவாதம்போன்ற முக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவும்இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறது.
ரஷ்ய அதிபரின் இந்திய பயணத்தின்போது, கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம்குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும். இரு நாடுகளும் இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களை ரஷ்யாவின் உதவியுடன் புதுப்பிப்பது குறித்தும் விவாதிக்கும்.
ரஷியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு திட்டங்களில் இந்தியா அதிக அளவில்முதலீடு செய்ய வேண்டும் என்றார் கடாக்.
ரஷ்ய அதிபர் விலாடிமின் புடின் அக்டோபர் 2-ம் தேதி இந்தியாவிற்கு வர இருக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவும், மாஸ்கோவும் ரஷ்ய அதிபரின் வருகையின்போது கையெழுத்திட வேண்டிய ஒப்பந்தங்கள் குறித்து தீவிரமான விவாதத்தில்ஈடுபட்டுள்ளன.
சமீபத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் ஜோஷி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் ரஷ்ய அதிபரை சந்தித்தனர்.
யு.என்.ஐ.