For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக திரைப்படத் துறை வேலைநிறுத்தம் தொடர்கிறது

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமார், சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடியிலிருந்து விடுதலையாகி வரும்வரை திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம் தொடரும் என்று கர்நாடக திரைப்படவர்த்தக சபைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத் திரைப்படத் துறையினர் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தைக்கைவிட்டுவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு கோபால் மூலம்கொடுத்தனுப்பியிருந்த வீடியோ கேசட்டில் நடிகர் ராஜ்குமார் கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந்த நிலையில், கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டம்பெங்களூரில் வெள்ளிக்கிழமை தலைவர் கே.சி.என்.சந்திரசேகர் தலைமையில்நடந்தது. இக்கூட்டத்தில் நடிகர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வேலைநிறுத்தத்ததால்ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். என்னால் யாரும்பாதிப்பக்கப்படக் கூடாது என்று நடிகர் ராஜ்குமார் கூறியுள்ளார்.

பிறருக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று நினைப்பவர் ராஜ்குமார். அவர் மீதுஎங்களுக்கு மரியாதை இருக்கிறது. இருப்பினும் இப்போதைக்கு சினிமா தொடர்பானபணிகளைத் தொடங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.

ராஜ்குமார் வந்தவுடன்தான் திரைப்படத் துறை தொடர்பான பணிகளைத் தொடங்கத்திட்டமிட்டுள்ளோம் என்றார் சந்திரசேகர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X