நாளை பெங்களூர் செல்கிறார் ரஜினி
சென்னை:
தமிழ்த் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை செல்கிறார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமாரின் வீட்டுக்குச்சென்று அவரது மனைவி பார்வதம்மா மற்றும் மகன்களை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றுள்ளார். ராஜ்குமாரை மீட்க தமிழக, கர்நாடக அரசுகள்தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளன.
வீரப்பனைச் சந்திக்க அரசுத் தூதராக காட்டுக்குள் சென்ற நக்கீரன் கோபாலிடம் ரஜினிகாந்த் ஒருகேஸட் கொடுத்தனுப்பியிருந்தார்.
அந்த கேஸட்டில், ராஜ்குமார் கடத்தப்பட்டதால் கன்னட திரைப்படம் உலகம்பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தொழிலில் ஈடுபடும்படி திரைப்படத் துறையினருக்கு கோரிக்கைவிடுக்கும்படி ராஜ்குமாருக்கு ரஜினிகாந்த் பேசியிருந்தார்.
காட்டுக்குள் ராஜ்குமாரைச் சந்தித்த நக்கீரன் கோபால், ரஜினிகாந்த் கொடுத்தனுப்பிய கேஸட்டைராஜ்குமாரிடம் கொடுத்தார். அதை ஆர்வமுடன் கேட்டார் ராஜ்குமார்.
பின்னர் அவரும் ரஜினிகாந்துக்கு ஒரு கேஸட்டைக் கொடுத்தனுப்பினார். அதில், பெங்களூருக்கு நீங்கள்நேரில் சென்று எனது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறும்படி ராஜ்குமார் கூறியிருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை ரஜினிகாந்த் செல்கிறார்.