தீர்ப்பு குறித்து கார்ட்டூன் வெளியிட தடை கோருகிறார் சசிகலா
சென்னை:
டான்சி வழக்கு குறித்து எந்தவிதமான செய்திகளோ அல்லது கார்ட்டூன்களோவெளியிடக் கூடாது என பத்திரிக்கைகளுக்கு உத்தரவிடுமாறு சசிகலா மூன்றாவது தனிநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
டான்சி நில ஊழல் சம்பந்தமான வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரதுநெருங்கிய தோழி சசிகலா உட்பட 6 பேர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு,மூன்றாவது தனி நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் 4-ம்தேதி வக்கீல்கள் வாதம் நடைபெற உள்ளது. தி.மு.க. ஆதரவு நாளிதழ் ஒன்றில்வெள்ளிக்கிழமையன்று டான்சி நில வழக்கு தொடர்பாக கார்ட்டூன் வெளியாகிஇருந்தது.
இதை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளோர். அதில், வழக்குநடந்து கொண்டிருக்கும் போது வழக்கின் முடிவைப்பற்றி இது போன்ற கார்ட்டூன்களோஅல்லது கருத்துக்களையோ வெளியிடுவது வழக்கின் தன்மையை பாதிக்கும். எனவே,இது போன்ற செய்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சசிகலா கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அன்பழகன், கார்ட்டூன் வெளியிட்ட நாளிதழின் நிருபரைஅழைத்து, இனி வழக்கு சம்பந்தமாக இது போன்ற கார்ட்டூன்களை வெளியிடக் கூடாதுஎன கண்டித்தார்.