ஐ.ஐ.டியில் வேலை கோரி ஆர்ப்பாட்டம் .. பா.ம.க முடிவு
சென்னை:
வேலை கொடுக்கக் கோரி ஐ.டி.ஐ. முன் ஆர்ப்பாட்டம் நடத்த பா.ம.க முடிவு செய்துள்ளது.
தென் சென்னை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் திருவல்லிக்கேணி தொகுதி மாநாடு சனிக்கிழமை நடந்தது.
மாநாட்டில் பேசிய கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், சென்னை அடையாறில், அரசுக்குச் சொந்தமான இந்தியத் தொழில்நுட்ப பயிற்சிநிறுவனம் (ஐ.ஐ.டி.) உள்ளது. இந்த ஐ.ஐ.டி.க்கு ஆண்டுக்கு ரூ. 100 கோடி செலவாகிறது. இந்தப் பணம் நம்முடைய பணம்.
வருகிறது 11-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஐ.ஐ.டிக்கு 150 பேராசிரியர்களை வேலைக்கு எடுக்கிறார்கள்.
ஐ.ஐ.டியில் வன்னியர் சமுதாய மக்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு ஐ.ஐ.டி. முன்பு வன்முறையில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். ஆர்ப்பாட்டம் செய்துவேலைவாய்ப்பு பெற்று உள்ளே நுழையவில்லை என்றால் இன்னும் 30 ஆண்டுகளுக்கு நாம் நுழைய முடியாது.
முதலில் நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள். அரசு கேட்காவிட்டால் நானே வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறேன் என்றார் டாக்டர் ராமதாஸ்.