கள்ளச் சாராயம் விற்ற 2 லட்சம் பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 2, 27, 771 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து பத்து கோடி ரூபாய் வரை அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2, 45, 796 கள்ளச்சாராய வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
1, 74,601 ஆண்களும் 53, 110 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 28,33,151 லிட்டர் சாராயம், 1,53,66,155 லிட்டர் சாராய ஊறல்1,47,591 சாராயப் பாக்கெட்டுகள் 4,46,546 லிட்டர் எரி சாராயம் 2,76,006 லிட்டர் கள், 1,17,794 லிட்டர் மட்கா சாராயம், 1,94,602பாட்டில் போலி மற்றும் இரண்டாம் தர மதுவகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றைக் கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட 3183 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கூறுகிறது அரசு புள்ளி விவரம்.












Click it and Unblock the Notifications