For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதுவல்லவோ தேசப்பற்று!

By Staff
Google Oneindia Tamil News

ஜோலோ (லிபியா):

ஒரு பெண் தனது உயிரை விட மேலானதாகக் கருதுவது கற்பைத்தான். ஆனால், அந்த கற்பையே தியாகம் செய்ய முன் வந்துள்ளார் லிபிய நடிகை மரினல்லாமோரன்.

எதற்காகத் தெரியுமா? நாட்டுக்காக. பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் அபு சய்யப் என்ற முஸ்லிம் தீவிரவாத அமைப்பு லிபியாவைச் சேர்ந்த 12பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளது.

இவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 12 கிறிஸ்தவர்களையும் அந்த தீவிரவாத அமைப்பு பிடித்து வைத்துள்ளது.இவர்களை விடுவிக்க வேண்டுமென்றால், ரூ. 4.5 கோடி தரவேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந் நிலையில், பணயக் கைதிகள் அனைவரையும் மீட்க யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு தியாகத்தைச் செய்ய முன்வந்துள்ளார் லிபிய நடிகை மோரன்.தனது கற்பைக் கொடுத்து லிபியர்களைக் காக்கத் தயார் என்று கூறியுள்ளார் மோரன்.

எங்கள் நாட்டுப் பணயக் கைதிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். தீவிரவாத அமைப்பின் தலைவரைத் திருமணம் செய்துகொள்ளவும் அல்லது அவரை எந்தவிதத்தில் சந்தோஷப்படுத்தமுடியுமோ அந்த வகையில் சந்தோஷப்படுத்தவும் நான் தயாராக உள்ளேன்.

ஒரு பெண் தனது உயிரை விட மேலாகக் கருதும் கற்பையும் இழந்து பணயக் கைதிகளை மீட்பதற்காக தீவிரவாதிகளைச் சந்தோஷப்படுத்தவும் நான்தயாராக இருக்கிறேன் என்று நடிகை கூறியுள்ளார். மோரனின் விருப்பத்துக்கு லிபிய அரசு அனுமதி கொடுக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X