பவானி ஆற்றில் ரங்கராஜன் அஸ்தி கரைப்பு
நாமக்கல்:
மறைந்த மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் அஸ்தி பவானி கூடுதுறையில் கரைக்கப்பட்டது. அவரது மகன் பரிசலில் சென்றுஆற்றில் கரைத்தார்.
ரங்கராஜன் குமாரமங்கலத்தின் அஸ்தி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி உள்படதலைவர்கள் மத்திய அமைச்சரின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து ரங்கராஜனின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகாலை கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது பூர்வீக வீட்டின் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் கார் மூலம் அஸ்தி காலை 9-45 மணிக்கு பவானி கூடுதுறைக்கு கொண்டு வரப்பட்டது. அஸ்தியுடன் ரங்கராஜனின் மனைவி கிட்டி, மகன் மோகன், மகள் ருச்சித்ரா ஆகியோரும் வந்தனர்.
பவானி கூடுதுறையில் அஸ்திக்கு அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி , தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்பட ஏராளமானவர்கள்அஞ்சலி செலுத்தினார்கள்.
மலர் அலங்காரம் செய்யப்பட்ட பரிசலில் வைத்து பவானி ஆறும், காவிரி ஆறும் சங்கமிக்கும் இடத்தில் அஸ்தியை ரங்கராஜனின் மகன் மோகன்குமாரமங்கலம் கரைத்தார்.