பொகாரோ இரும்பாலையை நவீனப்படுத்த ரூ. 65 கோடி
பொகாரோ:
பொதுத் துறை நிறுவனமான பொகாரோ இரும்பு உருட்டாலையை நவீனப்படுத்த செய்ல் (ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா) நிறுவனம் ரூ. 65 கோடிசெலவிடும் என்று மத்திய எஃகுத் துறை இணை அமைச்சர் பிராஜா கிஷோர் திரிபாதி தெரிவித்தார்.
பொகாரோ இரும்பு உருட்டாலையில் புதிய பிரிவை அவர் திங்கள்கிழமை துவக்கி வைத்துப் பேசியதாவது:
நாட்டில் லாபகரமாக இயங்கி வரும் இரும்பாலைகளை நவீனப்படுத்தவும், நலிவடைந்துள்ள ஆலைகளை மீண்டும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வரவும்மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.
பொகாரோ இரும்பு உருட்டாலையை நவீனப்படுத்த செய்ல் நிறுவனம் ரூ. 65 கோடியைச் செலவிடவுள்ளது. ஆலைத் தொழிலாளர்களும், நவீனதொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தியை அதிகரிக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் அவர்.
ஆலை செயல்படும் விதம் குறித்து ஆலையின் உயர் அதிகாரிகளுடன் அவர் பேச்சு நடத்தினார். பின்னர் இந்த ஆலை தானமாகக் கொடுத்த நிலத்தில் ஜகந்நாதர்ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல்லை அவர் நாட்டினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications