குழந்தையை தரையில் வீசிக் கொன்ற அன்புத் தந்தை
சென்னை:
தனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகத்தில் 7 மாதக் குழந்தையை தரையில் வீசி கொன்ற தந்தையை போலீஸ் தேடி வருகிறது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே சின்னமிட்டீர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி ராணி (வயது 23).
கட்டட மேஸ்திரியான ராஜாமணியும், ராணியும் கோவையில் கட்டட வேலை செய்து வந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து2 ஆண்டுகள் ஆகின்றன.
ராணி கர்ப்பமானதில் இருந்து கணவன், மனைவிக்கு இடையே சந்தேகப் பேய் புகுந்து கொண்டது. மனைவியின் கர்ப்பத்திற்கு தாம் காரணமில்லை என்றஉணர்வு ராஜாமணிக்கு ஏற்பட்டது. இதனால் கர்ப்பத்தை கலைக்கும்படி வற்புறுத்தினார். ஆனால், ராணி மறுத்து விட்டார். இது அவரது சந்தேகத்தைமேலும் வலுப்படுத்தியது.
இதற்கிடையில் ராணி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். எனக்கு பிறந்திருந்தால் குழந்தை இவ்வளவு அழகாக பிறந்திருக்காது என்றுராஜாமணி மனைவியிடம் சண்டை போட்டு வந்தார்.
ஆனால், அதை சட்டை செய்யாமல் குழந்தையை வளர்க்க எண்ணினார் ராணி. சம்பவத்தன்று ஆத்திரத்தோடு ராஜாமணி வீட்டுக்கு திரும்பியபோது, ராணிதன் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தார். அதை கண்டதும் ராஜாமணிக்கு தலைகால் புரியாத கோபம்.
யாருக்கு பிறந்த குழந்தை இது? இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்று தாயின் மடியில் சிரித்துக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை பறித்தார்.கால்களை பிடித்துக் கொண்டு தரையில் வீசி அடித்தார். குழந்தையின் தலை சிதறியது.
அந்த காட்சியைக் கண்டதும் அதிர்ச்சியில் ராணி மயங்கி விழுந்தார். எவனுக்கோ பிறந்த குழந்தையை பெற்ற வயிறு இது தானே என்று சொல்லிக்கொண்டே மயங்கிக் கிடந்த ராணியின் வயிற்றில் ஓங்கி உதைத்தார் ராஜாமணி. சுருண்டு விழுந்தார் அப்பெண்.
அக்கம்பக்கத்தவர் மருத்துவமனையில் ராணியை சேர்த்தனர். மறுநாள் கண் விழித்த ராணி, கொலைக்கார கணவன் பற்றி புகார் செய்தார். அதற்குள்ராஜாமணியின் உறவினர்கள், குழந்தையைப் புதைத்து விட்டனர். விவரம் தெரிந்த போலீசார் குழந்தையின் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைசெய்தனர். தலைமறைவாகி விட்ட ராஜாமணியை தேடி வருகின்றனர்.