இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டத்தை பயன்படுத்துகிறது பாக்.
கல்கத்தா:
இந்தியாவில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவுடன், பாகிஸ்தான் மறைமுகப் போரில்ஈடுபட்டுள்ளது என்று மத்திய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கல்கத்தாவில், கார்கில் போர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
இந்தியாவில் 4.1 கோடி பேர் வேலையில்லாத் திண்டாட்டத்தால் அவதிப்படுகின்றனர். இதைத் தனக்குச் சாதகமாக பாகிஸ்தான் பயன்படுத்திக்கொண்டுவே லையில்லாத இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை கூறி தீவிரவாதத்தில் ஈடுபட வைக்கிறது. இவர்களைக் கொண்டு எல்லைப் பகுதியில் சண்டையில்ஈடுபட்டு வருகிறது.
வேலையில்லாத் திண்டாட்டம்தான் நாட்டில் பெருகி வரும் அனைத்துக் குற்றங்களுக்கும் முக்கியக் காரணமாகும்.
இதுவரை, ஆண், பெண் உள்பட 2 ஆயிரம் உல்பா தீவிரவாதிகள், தீவிரவாதத்தைக் கைவிட்டு விட்டு சரணடைந்துள்ளனர். அவர்களது தேவைவேலைவாய்ப்பு மட்டுமே. வேறு எதுவும் இல்லை.
கார்கில் மற்றும் டிராஸ் பகுதிகளில் ஊடுறுவியும், தீவிரவாதிகளை அனுப்பி சண்டையில் ஈடுபட்டும் 22 வருடமாக இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்தநல்லுறவை பாகிஸ்தான் சீர் குலைத்து விட்டது என்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ்
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications