ஆண்டிப்பட்டியைக் குறி வைக்கும் ஹிட்லரின் பேத்தி"
தேனி:
ஹிட்லரின் பேத்தி ஜெயலலிதா ஆண்டிப்பட்டி, போடி தொகுதிகளை குறிவைக்கிறார் என்றார் அமைச்சர் அன்பழகன்.
தேனி மாவட்டம் போடி காமராஜர் சாலையில் உள்ள தேவர் சிலை திடலில் நகர தி.மு.க.சார்பில் கழக அரசின் சாதனைகளை விளக்க சிறப்புபொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பேசிய கல்வி அமைச்சர் அன்பழகன், தற்பொழுது அ.தி.மு.க.வைப் பொறுத்த வரை முதலில் குறிவைப்பது தேனிமாவட்டம் தான்.
ஹிட்டலரின் பேத்தி ஜெயலலிதா தற்போது ஆண்டிப்பட்டி, போடி தொகுதிகளைக் குறிவைக்கிறார். இங்குதான் ஏமாளிகள் இருக்கிறார்கள் என்றுநினைக்கிறார். இங்குதான் கட்டு கட்டாகப் பணம் சேர்த்துக் கொடுக்க வசதியாக இருக்கும் என்று ஜெயலலிதா இந்தத் தொகுதியைத் தேர்வுசெய்துள்ளார்.
இப்போது பாலம் கட்டியுள்ளோம். பாலத்தோடு ஆற்றில்தான் நடப்போம் என்றால் என்ன செய்ய முடியும்? சரி பள்ளிக்கூடங்கள் கட்டிவைத்து பிள்ளைகளைபடிக்க வைக்க அனுப்புங்கள் என்கிறோம்.
ஆனால் பிள்ளைகளை படிக்க அனுப்ப மாட்டோம். கழுதை மேய்க்கத்தான் அனுப்புவோம் என்றால் என்ன செய்ய முடியும் என்றார் அமைச்சர்.