மதுரையைத் தலைநகராகக் கொண்டு தனி மாநிலம் தேவை"
மதுரை:
தென் மாவட்டங்கள்ை சேர்த்து மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டுமென்றுதென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் அமைப்பைச் சேர்ந்த வக்கீல் கே.மணவாளன் திங்கள்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை, தென் தமிழகத்திலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டியுள்ளது.
தென் தமிழகத்தின் நிர்வாக வசதியை முன்னிட்டும், தொழிற்சாலை வளர்ச்சியை முன்னிட்டும் மதுரையைத் தலைநகராகக் கொண்டு புதிய மாநிலம் அமைக்கவேண்டும். இவ்வாறு தனி மாநிலம் அமைப்பதால் காவிரி ஆற்றிலிருந்து தென்பகுதியிலுள்ள 18 மாவட்டங்கள் பயனடையும்.
1948 ல் அமைக்கப்பட்ட தர் கமிஷன் தனி மாநிலம் அமைப்பதற்கான பரிந்துரை வழங்கியுள்ளது. ஆனால் தர் கமிஷனின் பரிந்துரையை நேரு அமைச்சரவைநிராகரித்து விட்டாலும், புதிய மாநிலம் அமைப்பதற்கு அது அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தென் தமிழ்நாட்டில் மதுரையைத் தலைநகரமாகக் கொண்ட புதிய மாநிலம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்என்று கூறியுள்ளார் மணவாளன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications