புதுவை பார்வதி ஷா கொலை வழக்கில் நாளை தீர்ப்பு
புதுவை:
புதுவையில் பார்வதி ஷா கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.
புதுவையைச் சேர்ந்த வைர வியாபாரியான ரவி ஷாவின் மனைவி பார்வதி ஷா. இவர் கடந்த ஆண்டு கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்.
இவ் வழக்கில் ரவி ஷாவின் சகோதரர் கமல் ஷாவும், தாய் பத்மாவதி ஷாவும் கைது செய்யப்பட்டனர். இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளபார்வதி ஷாவின் கணவர் ரவி ஷா தலைமறைவாக உள்ளார்.
இவர்கள் மீதான வழக்கு புதுவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பார்வதி ஷாவைக் கற்பழித்துக் கொலை செய்ததாக கமல் ஷா மீதும்,குற்றத்தையும், சாட்சியங்களையும் மறைத்ததாக பத்மாவதி ஷா மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இவ் வழக்கை விசாரித்த புதுவை தலைமை செஷன்ஸ் நீதிபதி இ.வி.குமார், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றங்களையும் திங்கள்கிழமை உறுதிசெய்ததுடன் இவ் வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications