For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் போலீசாருக்கு ஊதிய உயர்வு"

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக போலீஸாருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று அக்கட்சி நிறுவனர்ராமதாஸ் கூறினார்.

தென்சென்னை மாவட்ட பா.ம.க.திருவல்லிக்கேணி தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியதாவது:

தமிழகத்தில் நியாயம் கிடைக்காமல் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப் பட்டதுதான் பாட்டாளி மக்கள் கட்சி. வரும் 2006ல் தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சிதான் ஆட்சியமைக்கும்.

பா.ம.க.ஆட்சிக்கு வந்ததும் முதல்வேலையாக போலீஸாருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும். வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை. நமது ஆசைகளை,கொள்கைகளை அமைக்க நமது ஆட்சி இருந்தால்தான் அது சாத்தியம்.

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.க்கு ஆண்டு தோறும் நாம் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து 100 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இந்நிலையில்இந்நிறுவனத்திற்கு வரும் 11 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை 150 பேராசரியர்கள் வேலைக்காக நியமிக்கிறார்கள்.

அப்போது வேலைவாய்ப்பு கேட்டு அமைதியாக வன்முறையின்றி ஆர்ப்பாட்டம் செய்வோம். ஆர்ப்பாட்டம் செய்து வேலைவாய்ப்பை நாம் பெறமுயற்சிப்போம்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினால் இன்னும் 30 வருட காலத்திற்கு நாம் ஐ.ஐ.டி.க்குள் நுழைய முடியாது என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X