For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜய் ரசிகர்கள் மீது தடியடி .. 5 பேர் மண்டை உடைந்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருச்சியில் நடிகர் விஜயை சந்திக்க வந்த ரசிகர்கள் கல்லெறிந்து கலாட்டா செய்ததால், போலீசார் தடியடி நடத்திவிரட்டினர். இதில் 5 ரசிகர்கள் மண்டை உடைந்தது.

"குஷி படத்தின் நூறாவது நாள் விழா மற்றும் ரசிகர் மன்ற விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக நடிகர்விஜய் திருச்சி வந்திருந்தார். விழாவில் ஏழை எளியவர்களுக்கு இலவச தையல் மிஷின்கள், இலவச வேட்டி,சேலைகளை விஜய் வழங்குவார் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

இதையடுத்து நடிகர் விஜய் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு ரசிகர்கள் திரண்டனர். அபிமான நடிகரை சந்திக்கவேண்டும் என்று ஹோட்டலுக்குள் நுழைய முண்டியடித்தனர். ஆனால், விஜய் அறையை விட்டு வெளியேவரவில்லை. ரசிகர்களை சந்திக்கவும் விரும்பவில்லை. ஆனால், நேரம் செல்ல செல்ல வெளியில் ரசிகர்கள் கூட்டம்அதிகரித்தது. பொறுமையிழந்த ரசிகர்கள் கூச்சல், கோஷங்கள் எழுப்பினர்.

ஹோட்டலின் கதவை இழுத்து மூடிய போலீசார் ரசிகர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால்ஆவேசமடைந்த ரசிகர்கள் கல் வீசினர். ஹோட்டல் கண்ணாடிகள் தூள் தூளாகின. இதையடுத்து போலீசார் தடியடிநடத்தி ரசிகர்களை விரட்டி அடித்தனர்.

கூட்டத்தை கலைத்து விட்ட திருப்தியில் போலீசார் போய் விட்டனர். ஆனால் ரசிகர்கள் விடவில்லை. ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் அங்கே முற்றுகையிட்டனர். விஜயை சந்திக்காமல் போக மாட்டோம் என்றுகோஷமிட்டனர். வேறு வழியின்றி விஜயின் தந்தை டைரக்டர் சந்திரசேகர் வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார்.

விஜய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அமைதியாக கலைந்து செல்லுங்கள், மாலையில் உங்களைசந்திப்பார் என்றார். இதையடுத்து ரசிகர்கள் கிளம்பினர்.

போலீஸ் தடியடியில் 5 ரசிகர்கள் மண்டை உடைந்த நிலையில் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X