டெலிகாம் துறை சீரமைப்புக்கு உலக வங்கி ரூ. 272 கோடி கடன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய தொலைத் தொடர்புத் துறை சீரமைப்புக்கு உலக வங்கி ரூ. 272 கோடி கடனுதவி வழங்க உள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் இந்திய அரசுக்கும், உலக வங்கிக்கும் இடையே திங்கள்கிழமை கையெழுத்தானது.
தொலைத் தொடர்புத் துறை சீர்திருத்தம் மற்றும் தொழில்நுட்ப உதவித் திட்டம் என்று இத் திட்டத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
இத் திட்டத்துக்கு உலக வங்கி அளிக்கும் ரூ. 272 கோடியுடன், இந்திய அரசு ரூ. 44 கோடியை ஒதுக்க உள்ளது.
இந்தியா முழுவதும் தொலைத் தொடர்புத் துறையின் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், இத் துறைக்கு பல நவீன கருவிகளை வாங்கவும், புதிய திட்டங்களைச்செயல்படுத்தவும் இத் தொகை செலவிடப்படும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications