கடலில் மூழ்கிய சிறுவனுக்குக் கைகொடுத்த டால்ஃபின்
மான்ஃபிரீடோனியா (இத்தாலி):
மனிதர்களுக்கு தான் எப்போதும் நண்பன் என்பதை டால்ஃபின் நிரூபித்துள்ளது. கடலில் மூழ்கிய ஒரு சிறுவனைக் காப்பாற்றியுள்ளது ஒரு டால்ஃபின்.
தெற்கு இத்தாலி கடல் பகுதியில் மான்ஃபிரீடோனியா வளைகுடாக் கடலில் தந்தையுடன் ஒரு சிறுவன் படகில் சென்று கொண்டிருந்தான்.
படகில் இருந்தபடி தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த அச் சிறுவன் திடீரென்று தண்ணீரில் விழுந்துவிட்டான். அவனைக் காப்பாற்ற அவனது தந்தை முயன்றும்முடியவில்லை.
தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்த சிறுவனை அக் கடலில் உள்ள டால்ஃபின் ஒன்று தண்ணீருக்கு மேலே தூக்கி வந்தது.
பின்னர் அச் சிறுவனின் தந்தை இருந்த படகுக்கு அருகே சிறுவனை விட்டுவிட்டு டால்ஃபின் கடலுக்குள் சென்றுவிட்டது.
தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்த என்னை ஏதோ ஒன்று தண்ணீருக்கு மேல் தள்ளியது. என்னவென்று பார்த்தபோது அது டால்பின் என்று அச் சிறுவன்கூறியுள்ளான்.