உருவானது தமிழக முன்னேற்றக் கழகம்
சென்னை:
தமிழகத்தில் இன்னும் ஒரு அரசியல் கட்சி உருவாகியுள்ளது.
தலித் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையிலான தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்றசங்கம், அரசியல் கட்சியாக உருமாறியுள்ளது. இதற்குப் பெயர் தமிழக முன்னேற்றக் கழகம்.
புதிய கட்சி குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் ஜான் பாண்டியன் அறிவித்தார்.ஜாதி அடிப்படையில் சமீபத்தில் உருவான இரண்டாவது கட்சி இதுவாகும். சிலநாட்களுக்கு முன்பு யாதவ சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், புதியகட்சியைத் துவக்கியது நினைவிருக்கலாம்.
கட்சி துவங்கியுள்ள ஜான் பாண்டியன் கூறுகையில், தேர்தல் கமிஷனில் கட்சி பெயர் பதிவுசெய்யப்பட்டு விட்டது. திருச்சியில் செப்டம்பர் 9-ம் தேதி கட்சி மாநாடு நடைபெறும்.அதே நாளில் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடும்நடைபெறும்.
வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களது கட்சி போட்டியிடும். தேர்தல் சமயத்தில் யாருடன்கூட்டணி வைத்துக் கொள்வது என்பது முடிவு செய்யப்படும்.
வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிப்பவர்களின் முன்னேற்றத்திற்காக எங்களது கட்சிபாடுபடும் என்றார் ஜான் பாண்டியன்.
கட்சியின் மூவண்ணக் கொடியையும் ஜான் பாண்டியன் செய்தியாளர்களுக்குஅறிமுகப்படுத்தினார். இக்கொடி, மேலும்,கீழும் சிவப்பும், நடுவில் பச்சையும் கொண்டதாகஅமைந்துள்ளது.
யு.என்.ஐ