ஐ.நா.வில் நிரந்தர இடம் ... இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு
மாஸ்கோ:
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அக்டோபர் மாதம் இந்தியா வருகிறார். இது குறித்து ரஷ்ய வானொலிக்கு அளித்த பேட்டியில் ரஷ்ய வெளியுறவுத் துறைஅமைச்சகத்தின் ஆசியப் பிரிவுத் தலைவர் அன்வர் அஸிமோவ் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பை மாற்றியமைக்கவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. அச் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின்நிரந்தர உறுப்பினராக ஆக இந்தியா முயற்சித்து வருகிறது.
இந்தியாவின் முயற்சிக்கு ரஷ்யாவின் ஆதரவு எப்போதும் உண்டு. ஏனெனில் இந்தியா ஒரு பலமான, நல்ல எதிர்காலம் உள்ள நாடு. இந்தியாவும்ரஷ்யாவும் பல விஷயங்களில் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன.
இப்போது பெரிய பிரச்சினைகளாக பயங்கரவாதம், பிரிவினைவாதம், மத அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக இரு நாடுகளும் கடுமையாகப்போராடி வருகின்றன.
பல விஷயங்களில் இரு நாடுகளும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தாலும், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் மற்றும் அணு ஆயுதப் பரிசோதனைத் தடைஒப்பந்தம் ஆகியவற்றில் இரு நாடுகளும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அக்டோபர் மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செல்கிறார். அதிபரின் பயணத்தினால் இரு நாடுகளுக்கும் இடையேயானநல்லுறவு மேலும் வலுப்படும் என்றார் அஸிமோவ்.
யு.என்.ஐ.