குடும்பத் தகராறில் 4 பேர் கொலை
சென்னை:
குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது. கணவன், மனைவி, மகள் உள்பட நான்குபேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். கொலை செய்த அண்ணன் தம்பியை போலீசார்தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சதானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமித் தேவர்(வயது 50). இவரது மனைவி குருவாத்தாள். (45). இவர்களது மகள் மகேஸ்வரி (24).
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த சந்தானம் என்பவருக்குமகேஸ்வரியை திருமணம் செய்து கொடுத்திருந்தனர். மகேஸ்வரிக்கும்,சந்தானத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் மகேஸ்வரிதனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்து விட்டார். தாய்தந்தையிடம், கணவர் வீட்டில் நடந்த கொடுமைகளை பற்றி கண்ணீருடன் கூறினார்.
இதையடுத்து முத்துசாமித் தேவர், குருவாத்தாள் ஆகியோர் மகளையும் அழைத்துக்கொண்டு தங்களது உறவினர்கள் சிலருடன் எட்டயபுரம் வந்தனர்.
மாப்பிள்ளை வீட்டாரிடம் போய் பேசினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையேவாக்குவாதம் நீண்டு சண்டையாக மாறியது.
ஆத்திரமடைந்த மாப்பிள்ளை சந்தானம், அவரது தம்பியும் சேர்ந்து மாமனார்முத்துசாமித் தேவர், மாமியார் குருவாத்தாள், மனைவி மகேஸ்வரி ஆகியோரைசரமாரியாக வெட்டி வீழ்த்தினர். பதிலுக்கு சந்தானம் தரப்பை சேர்ந்த ஒருவரைஇவர்கள் வெட்டினர். இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் பலத்த வெட்டுக் காயத்துடன் பாளையங்கோட்டை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.