5 ஸ்டார் ஹோட்டலை மிஞ்சிய திகார் ஜெயில் சமையல் அறை
டெல்லி:
5 நட்சத்திர ஹோட்டலின் சமையல அறையை விட திகார் சிறையின் சமையல் அறை சுத்தமானதாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது என்றுவெளிநாட்டு அதிகாரி ஒருவர் "சான்றிதழ்" கொடுத்துள்ளார்.
உர்சுலா ஸ்மார்ட் என்ற அந்த பெண், தேம்ஸ் வேலி பல்கலைக் கழகத்தில் சட்டம் மற்றம் நீதித் துறை பேராசிரியராகவும், இங்கிலாந்து உள்துறைஅமைச்சகத்தின் மூத்த ஆலோசகராகவும் இருக்கிறார்.
சமீபத்தில் நானும் எனது கணவரும் கஜுராஹோவுக்கு வந்திருந்தோம். அங்கிருந்த 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கினோம். அங்குள்ள சமையல் அறைசுத்தமில்லாததாகவும், பாதுகாப்பு இல்லாததாகவும் உள்ளதைக் கண்டோம்.
அது பற்றி அந்த ஹோட்டலின் மேலாளருக்கும், சமையல் அறை தலைவருக்கும் தகவல் தெரிவித்தோம். அந்த ஹோட்டலில் சாப்பிட்ட எங்களுக்குஉடல் நலமில்லாமல் போய்விட்டது.
நாங்கள் அழுக்கடைந்த கால்களுடனும், தலையைத் துணியாமல் மூடாமலும் அந்த ஹோட்டல் சமையலறைக்குச் சென்றோம். ஆனால், எங்களை யாரும்தடுக்கவில்லை. அந்த அளவுக்கு அங்கு "சுத்தம்" காக்கப்படுகிறது.
ஆனால், திஹார் சிறையில் உள்ள சமையல் அறைக்குச் செல்ல முயன்றோம். நாங்கள் அணிந்திருந்த காலணியைக் கழற்றிய பிறகும், தலை முடியைத் துணியால்மூடிக்கொண்ட பிறகும்தான் அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டோம்.
அங்கு கொடுக்கப்பட்ட டீயும், உணவும் 5 நட்சத்திர ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவு மற்றும் டீயை விட நூறு மடங்கு உயர்வானது. மேலும், அவைஅதிக தரமுள்ளதாகவும் இருந்தன என்று திகார் சிறையின் இயக்குநர் அஜய் அகர்வாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உர்சுலா ஸ்மார்ட் கூறியுள்ளார்.
தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவர் நீதிபதி ஜெ.எஸ். வர்மா திஹார் சிறைக்கு செவ்வாய்க்கிழமை வந்தார். அப்போது அங்குள்ள பேக்கரிக்குள்செல்ல முயன்ற அவரை, காலணியைக் கழற்றி விட்டு தலையைத் துணியால் மூடிக் கொண்டு வந்தால்தான் அனுமதிக்க முடியும் என்று கூறவிட்டனர்.
அந்த வகையில் சிறைக்குள் மேற்கொள்ளப்படும் தூய்மை நடவடிக்கைகளை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். திஹார் சிறையின் சமையல் அறைமட்டுமல்ல திஹார் சிறை வளாகம் முழுவதுமே தூய்மையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யு.என்.ஐ.