ஜாமீன் கோருகிறார் முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரூ. 77.49 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 11-ம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் பொன்னுச்சாமிக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறையும், அவரது மனைவி பிரபாவதி, மகள்மாலா, சகோதரர்கள் ராஜப்பா, வெங்கடேசன் ஆகியோருக்குத் தலா 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
இருப்பினும் குற்றவாளிகள் ஜாமீன் மனுத் தாக்கல் செய்வதற்கு வசதியாக செப்டம்பர் 11-ம் தேதி வரை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி பொன்னுச்சாமி குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications