தீவிரவாதி தமிழரசன் கொல்லப்பட்ட தினம் கவலையில் காவல்துறை
சென்னை:
பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு நடுவே கவலையோடு இருக்கிறார்கள் தமிழக காவல்துறைஅதிகாரிகள்.
காரணம் செப்டம்பர் 1ம் தேதி. இந்த நாளில் தான் தமிழ்த் தீவிரவாதியான தமிழரசன் கொல்லப்பட்டார். இப்போதுசந்தனக் கடத்தல் வீரப்பனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி வைத்துக் கொண்டுமிரட்டி வரும் கும்பல் இந்த தமிழரசனின் வழியில் வந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிர் மீட்ப்புப் படை என்ற பெயரில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயலபட்டு வந்த அமைப்பின்தலைவராக இருந்தவர் தமிழரசன். அவர் கொல்லப்பட்டதோடு இந்த அமைப்பும் ஒழிந்து போனதாக தமிழககாவல்துறையினர் எண்ணிக் கொண்டிருந்தனர்.
ஆனால், ராஜ்குமார் கடத்தல் மூலம், நாங்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறோம் என்பதைதெளிவுபடுத்திவிட்டது இந்த அமைப்பு. இந் நிலையில் இந்த அமைப்பின் தலைவர் தமிழரசன் கொல்லப்பட்டதினம் வருவதால் கொஞ்சம் திகிலோடு தான் உள்ளனர் காவல்துறையினர்.
ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமோ என்றும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள். இதனால் முன் எச்சரிக்கைநடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தீவிர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பாலங்கள் மத்திய- மாநில அரசு அலுவலகங்கள் போன்ற பல இடங்களில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை, கோவை, திருச்சி, மதுரை என்று தமிழகத்தின் பல இடங்களிலும் பலத்த போலீஸ்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications