கோபாலைச் சந்திக்க மறுத்த வீரப்பன்...
சென்னை:
ராஜ்குமாரை மீட்பதற்காக அரசு தூதராக மூன்றாவது முறையாக காட்டுக்குச் சென்றுள்ளநக்கீரன் ஆசிரியர் கோபால், சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.
வீரப்பனின் கோரிக்கைகள் மற்றும் அதற்கு இரு மாநில அரசுகளின் பதில்கள்தொடர்பான ஆவணங்களுடன் காட்டில் காத்திருந்த கோபால், 30-ம் தேதி வீரப்பனின்ஆட்கள் சிலரையும், தமிழ்த் தீவிரவாதிகள் சிலரையும் சந்தித்துப் பேசினார்.
அரசு கொடுத்த பதில்களையும், ஆவணங்களையும் பார்த்தவர்கள் 121 பேர் கேஸ்என்னாச்சு? 5 தீவிரவாதிகள் எங்கே என்று விசாரித்தனர்.
பின்னர் வீரப்பனிடம் இவ் விஷயம் எடுத்துச் சொல்லப்பட, நான் கேட்டது ஆட்கள்,நிவாரணம் என்றும் ஆவணங்கள் அல்ல. கோபாலைச் சந்திக்க முடியாது திரும்பிப்போகச் சொல்லு என்று வீரப்பன சொல்லி அனுப்பினானாம்.
நக்கீரன் ஆசிரியர் கோபால், இரு மாநில நிலவரங்களையும் எடுத்துச் சொல்லிய பின்பு,வியாழக்கிழமை மாலை வீரப்பனை சந்திக்க அழைப்பு வந்ததாம். அப்போது முதல்வீரப்பனிடம் கோபால் பேசிக் கொண்டிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை காலை நல்ல தகவல் வரும்என்கிறார்கள்.
நக்கீரன் அலுவலகத்தில் விசாரிக்க, ஆசிரியருடன் சென்றவர்களில் யாராவதுகாட்டிலிருந்து வெளியே வந்தால் தான் தகவல் தெரியும் என்றனர்.












Click it and Unblock the Notifications