கிணற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி
மதுரை:
திருநெல்வேலி மாவட்டம் தளபதி சமுத்திரம் என்ற இடத்தில் சாலையோரம் இருந்தவிவசாயக் கிணற்றில் வேன் கவிழ்ந்து விழுந்ததில், அதில் பயணம் செய்த 17 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கிய வேன் விருதுநகரிலிருந்து, கன்னியாகுமரிக்குச் சென்று கொண்டிருந்தது.சனிக்கிழமை அதிகாலை இந்த பரிதாப விபத்து நடந்தது.
வளைவு ஒன்றில் திரும்ப முயன்றபோது வேன் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால்,சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து விழுந்துள்ளது. கிணற்றுச் சுவரைஉடைத்துக் கொண்டு வேன் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கிணற்று அருகே நின்று கொண்டிருந்த சிறுவன் ஒறுவனையும் வேன் மோதிக் கொண்டுகிணற்றுக்குள் பாய்ந்துள்ளது. அந்தப் பையன் உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு வேன் வெளியேஎடுக்கப்பட்டது. 17 உடல்களும் மீட்கப்பட்டன. காயமடைந்த நான்கு ஆண்கள், நான்குபெண்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications