ராஜ்குமாரை மீட்க உதவும் 2-வது தூதர்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்க நக்கீரன் ஆசிரியர் கோபாலுடன் இன்னொரு தூதரும்அமைதியான முறையில் உதவிக் கொண்டுள்ளார். அவர் - பெங்களூர் அகில இந்தியவானொலி நிலையம்.
ராஜ்குமார் கடத்தப்பட்டு 30 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இத்தனை நாட்களும்ராஜ்குமார் மற்றும் வீரப்பன் கும்பலுக்கும், வெளி உலகுக்கும் இடையிலான தொடர்புவானொலி மூலமே இருந்து வருகிறது.
வீரப்பனுக்கு தினசரி வானொலி கேட்கும் பழக்கம் உள்ளது. இதைப் பயன்படுத்தி,பெங்களூர் வானொலி நிலையம் தினசரி பல செய்திகளை வீரப்பன் கும்பல்கேட்கும்படி ஒலிபரப்பி வருகிறது.
ராஜ்குமார் மனைவி பர்வதம்மாவின் கோரிக்கை, மகன்களது கோரிக்கை, அரசுகளின்அறிவிப்புகள், ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளைபெங்களூர் வானொலி நிலையம் தனது ஸ்பாந்தனா நிகழ்ச்சி மூலம் அடிக்கடிஒலிபரப்பி வருகிறது.
ராஜ்குமார் உடல் நிலை குறித்த தகவல்களையும் ஸ்பாந்தனா வீரப்பன் கும்பலுக்குஅடிக்கடி நினைவூட்டி வருகிறது. ராஜ்குமாருக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகள்குறித்து அது அடிக்கடி கூறி வருகிறது.
வீரப்பனுடன் கோபால் எளிதில் பேச முடிகிறதோ இல்லையே, பெங்களூர் வானொலிநிலையம் தொடர்ந்து தடையின்றி செய்திப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறது.
பெங்களூர் வானொலி இப்படி மத்தியஸ்தத்தில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல.1997-ம் ஆண்டு விஞ்ஞானி மைத்தி, போட்டோகிராபர் கிருபாகர், சேனானிஆகியோர் கடத்தப்பட்டபோதும், பெங்களூர் வானொலி மூலம் பல தகவல்கள்,வீரப்பனுக்குத் தெரிவிக்கப்பட்டன.
வானொலி நிலைய இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், விஞ்ஞானி மைத்தியின்மனைவி விடுத்த உருக்கமான கோரிக்கைகள் அடிக்கடி வானொலியில்ஒலிபரப்பப்பட்டன. சூரியன் மட்டுமே எளிதில் ஊடுறுவக் கூடிய காட்டுக்குள் அகிலஇந்திய வானொலியால் செல்ல முடியும் என்பதை இது நிரூபித்தது.
வீரப்பன் தொடர்ந்து வானொலி கேட்கும் பழக்கம் உள்ளவன் என்பதை அறிந்ததும்,வானொலி மூலம் கடத்தப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரலாம் என்றமுடிவுக்கு வந்தோம் என்றார்.
தற்போதயை கடத்தலிலும் வானொலி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ராஜ்குமாரைபார்த்து விட்டுத் திரும்பிய கோபாலின் பேட்டி ஒலிபரப்பப்பட்டது. அதில் ராஜ்குமார்எப்படி இருக்கிறார், அவரது உடல் நிலை குறித்து கோபால் விளக்கினார். ராஜ்குமாரை,வீரப்பன் நல்லபடியாக வைத்திருக்கிறான் என்றும் தனது பேட்டியில் கோபால்விளக்கினார்.
கர்நாடகத்தின் முதல் வானொலி நிலையம் மைசூரில் 1935-ம் ஆண்டுதுவக்கப்பட்டது. அப்போது இது தனியாரிடம் இருந்தது. இந்த வானொலி நிலையத்தில்இருந்த டிரான்ஸ்மிட்டர்தான் தற்போது, இலங்கை வானொலி நிலையத்தில் உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் வானொலி நிலையம் 1955-ம் ஆண்டு உருவானது. பெங்களூரிலிருந்து 50கிலோமீட்டர் தொலைவிலுள்ள தொட்டபல்லபூர் என்ற இடத்தில் வானொலிநிலையத்தின் ஒலிபரப்பு நிலையம்உள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications