"வீரப்பனைப் பிடிக்க ராணுவம் தேவையில்லை
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க ராணுவம் தேவையில்லை. அது ராணுவத்தின்ராணுவத்தின் வேலையும் இல்லை என்று ராணுவத்தின் பயிற்சி பிரிவு அதிகாரிலெப்டினன்ட் கமாண்டர் காலா கூறியுள்ளார்.
சென்னையில் செயல்பட்டு வரும் அதிகாரிகள் பயிற்சி மையத்தின் நிறைவு விழாசனிக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட காலா செய்தியாளர்களிடம்கூறுகையில், நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள பிரிவினை சக்திகளை ஒடுக்கும்முயற்சியில் ராணுவம் ஈடுபட்டு அதில் ராணுவம் பெரும் வெற்றியும் பெற்றுள்ளது.
ராணுவத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. இதைக் குறைக்கும்நடவடிக்கைகளில் ஒன்றாக அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளிட்ட ராணுவ பயிற்சிமையங்கள் தற்போது விரிவுபடுத்தப்பட உள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க ராணுவம் தேவையில்லை. அது ராணுவத்தின்வேலையும் இல்லை. காட்டில் ஒளிந்திருக்கும் வீரப்பனின் மறைவிடத்தைகண்டுபிடித்து அவனை பிடிக்க வேண்டியது புலனாய்வுத்துறையின் வேலை என காலாகூறினார்.