இலங்கை கடற்படை சொந்தமாக தயாரித்த ரோந்துப் படகு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கைத் தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்ட முதல் ரோந்துப் படகு, இலங்கைகடற்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது.
ரோந்துப் படகாகும் இது. இலங்கைக் கடற்படையின் வெலிசரா கப்பல் கட்டும்தளத்தில இந்தப் படகு கட்டப்பட்டது. தலைநகர் கொழும்புவுக்கு அருகில் வெலிசராஉள்ளது.
சொந்தமாக இந்தப் படகைத் தயாரித்ததால், 89,000 டாலர் பணம் மிச்சமானதாகஇலங்கை கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திஸேராதெரிவித்துள்ளார்.
இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகபோராடி வரும் இலங்கை பாதுகாப்புப் படைக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல்நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 1983-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த சண்டையில்இதுவரை 60,000 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications