இந்திய பஸ்களை வாங்குகிறது இலங்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இந்தியாவிலிருந்து 350 பஸ்கள் வாங்க இலங்கை முடிவு செய்துள்ளது. அடுத்த நான்கு மாதங்களில் இவை இந்தியாவிலிருந்து, இலங்கை செல்லும்.
டாடா மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்களிடமிருந்து இந்த பஸ்களை இலங்கை வாங்குகிறது. தலா 175 பஸ்களை இலங்கை போக்குவரத்துத் துறைவாங்குகிறது.
32 சீட் கொண்ட இந்த பஸ்களின் மதிப்பு 6.2 மில்லியன் டாலர் ஆகும். பஸ் வாங்குவதற்கு இலங்கை அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் கொடுத்தது.
போக்குவரத்துத் துறை செய்தித்தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், முதலில் ஜப்பான் பஸ்களையே வாங்க முடிவு செய்திருந்தோம். ஆனால் இந்திய பஸ்களைவிட மூன்று மடங்கு விலை அதிகம் என்பதால் அந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications