சென்னை அருகே ரயில் தடம்புரண்டது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருப்பதி, சென்னைக்கு இடையிலான கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமைகாலை விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் ஆபத்தின்றி உயிர் தப்பினர்.
ஆவடி, பட்டாபிராம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் என்ஜின் தடம்புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. எதிர் திசையில் ஒரே தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த டிராலி மீது கருடாத்ரி ரயிலின் என்ஜின் மோதியதால் விபத்துஏற்பட்டது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. என்ஜின்டிரைவரும் காயமின்றித் தப்பினார். போக்குவரத்தும் பாதிப்பின்றி தொடர்ந்தது.
விபத்தில் சிக்கிய ரயிலின் பயணிகள் அனைவரும் மின்சார ரயில் மூலம் சென்னைக்குஅனுப்பப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications