For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"உணவு உற்பத்திக்குத் தேவையான நிலம் உள்ளது

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தமிழகத்தில் உணவு உற்பத்தி செய்ய தேவையான நிலப்பரப்பு அதிக அளவில்உள்ளது. இங்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை எளிதாக உற்பத்தி செய்ய இயலும் எனதோட்டக் கலைத் துறை கமிஷனர் சுர்ஜித் கே சவுத்ரி தெரிவித்துள்ளார்.

கோவையில் அக்ரி இன்டெக்ஸ் 2000 கண்காட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக் கழகமும், கொடீசியாவும் இணைந்து நடத்தும் இந்தகண்காட்சியில், தோட்டக்கலைத் துறை கமிஷனர் சவுத்ரி பேசியதாவது:

இந்தியாவில் கடந்த ஆண்டில் பழங்கள் பெருமளவில் உற்பத்தியாகியுள்ளன. 9. 3லட்சம் ஹெக்டேரில் 156. 5 லட்சம் மெட்ரிக் டன் பழங்கள்உற்பத்திசெய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் 400 கிராம் அளவில் காய்கறி மற்றும் பழங்கள்உணவாகப் பயன்படுத்த வேண்டும்.ஆனால், தற்போது 130 கிராம் என்றஅளவிலேயே இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் உணவு உற்பத்திக்குப் பயன்படக் கூடிய நிலங்கள் 3.51 லட்சம்ஹெக்டேர் உள்ளது. இந்த நிலப்பரப்பைப் பயன்படுத்தி பழங்கள் மற்றும் காய்கறிகளைஉற்பத்தி செய்ய இயலும்.

வருங்காலத்தில், சர்வதேசப் பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடர்ந்துஇந்தியாவிற்கு காய் கறி மற்றும் பழங்களின் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்த நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவில்லையென்றால்மோசமான சூழ்நிலையைச் சந்திக்க வேண்டியது வரும். உணவு உற்பத்தியில் முதலிடம்வகிக்கும் அமெரிக்கா, சீனா இஸ்ரேல் போன்ற நாடுகளை சமாளிப்பது கடினமாகிவிடும் என்று அவர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X